மறைமாவட்டம் ஆண்டான்குளம் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய 50ஆவது ஆண்டு யூபிலி திருவிழா பங்குத்தந்தை இயேசு சபை அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி புரட்டாதி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
அத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெறாட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா மற்றும் நற்கருணைவிழா திருப்பலிகளை இயேசு சபை அருட்தந்தை லோறன்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.