தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தினத்தை சிறப்பித்து அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் முதியோர் பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகளால் மலர்ச்செண்டு கொடுத்து ஆலயத்திற்குள் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து திருப்பலி இடம்பெற்றது.

திருப்பலி நிறைவில் முதியோர்களுக்கான ஒன்றுகூடல் நடைபெற்றது.

இவ் ஒன்றுகூடலில் முதியோர்களுக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றதுடன் கவிதை, பாடல், பேச்சு போன்ற கலைநிகழ்வுகளும் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகளால் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் 30 வரையான முதியோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin