தீவகம் அல்லைப்பிட்டி மொண்பேர்ட் சர்வதேச பாடசாலை அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தவக்கால தியானம் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை மாதா திருத்தலத்தில் இடம்பெற்றது.

பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்துதலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பவை இடம்பெற்றன.

இத்தியான நிகழ்வை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்கள் நெறிப்படுத்தினார்.

By admin