அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா ஆவணி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து புனரமைக்கப்பட்ட ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin