தீவகம் அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா தீவக மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
17ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 24ஆம் திகதி அன்பிய பகிர்வும் கலைநிகழ்வுகளும் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழாவும் இடம்பெற்றன.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.