யாழ். மறைமாவட்ட குருவும் சாவகச்சேரி பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு யூன் மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலியும் தொடர்ந்து யூபிலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இந்தியாவில் இயங்கும் மாதா தொலைக்காட்சி இயக்குநர் அருட்தந்தை டேவிட் ஆரோக்கியம், குருக்கள், துறவிகள், அருட்தந்தையின் குடும்ப உறவினர்களென பலரும் கலந்துகொண்டனர்.

 

By admin