அல்லைப்பிட்டி இராணுவ பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 20ஆம் திகதி புதன்கிழமை அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஜிம் பிறவுண் அவர்கள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தீவகம், அல்லைப்பிட்டி பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்படட மக்களுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோது 2006ஆம் ஆண்டு இதேநாள் வலிந்து காணாமலாக்கப்பட்டார்.

அவருடன் சேர்ந்து பயணித்த திரு. வின்சன் விமலதாஸ் அவர்களும் அருட்தந்தையுடன் காணாமல் ஆக்கப்பட்டதுடன் இவர்களை பற்றிய உண்மையான தகவல்கள் இதுவரை வெளிவராமல் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin