யாழ். மறைமாவட்டத்தின் மூத்த குருவாகிய அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் தலைமையில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து யூபிலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து அருட்தந்தையின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி செபித்தனர்.
