திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி சித்திரா மனுவேற்பிள்ளை அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வு 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மானிப்பாய் பங்குத்தந்தையும் அருட்சகோதரியின் சகோதரருமான அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து அருட்சகோதரிக்கான கௌரவிப்பு மற்றும் யூபிலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரியின் உறவினரென பலரும் கலந்து செபித்தனர்.