யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி அருட்சகோதரர்களுக்கான திருப்பணிகள் வழங்கும் திருச்சடங்கு ஐப்பசி மாதம் 6ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்ற திருச்சடங்கு திருப்பலியில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரர்கள் ஜோண் பிலிப் ஜோண் எமில்ரன், றெனாட் ஜோண்சன் ஜோண் கில்ரன், ஸ்ரனிஸ்லஸ் ஸ் ரீபன்றாஜ் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்சகோதர் பத்மநாதன் அன்ரன் றெஜினோல்ட் ஆகியோர் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.
அத்துடன் யாழ்ப்பாணம், மன்னார், சிலாபம், திருகோணமலை மறைமாவட்டங்களை சேர்ந்த 07 அருட்சகோதரர்களுக்கு வாசகர்கள், குருத்துவவேட்பாளர் ஆகிய திருப்பணிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், இறைமக்களெனப் பலரும் கலந்து அருட்சகோதரர்களுக்காக செபித்தனர்.
