அச்சுவேலி பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் புனித சூசையப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் புனித சூசையப்பர், புனித அந்தோனியார், நவக்கிரி புனித றீற்றம்மாள் ஆலயங்களை சேர்ந்த 43 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
