தவக்காலத்தை முன்னிட்டு வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா யாத்திரைத்தலத்தில் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் பங்குனி மாதம் 08ஆம் திகதி இளவாலை மறைக்கோட்டத்திற்கும் பங்குனி மாதம் 15ஆம் திகதி கிளிநொச்சி மறைக்கோட்டத்திற்கும் பங்குனி மாதம் 22ஆம் திகதி தீவக மற்றும் பருத்தித்துறை மறைக்கோட்டங்களிற்கும் பங்குனி மாதம் 29ஆம் திகதி யாழ்ப்பாண மறைக்கோட்டத்திற்கும் சித்திரை மாதம் 05ஆம் திகதி முல்லைத்தீவு மறைக்கோட்டத்திற்கும் பிரத்தியேகமான நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் சித்திரை மாதம் 12ஆம் திகதி பொது வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.