யாழ்ப்பாணம் சுண்டிக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய வருடாந்த திருவிழா 24ஆம் திகதி சனிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
15ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 23ஆம் திகதி நற்கருணை விழாவும் இடம்பெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் ஒப்புக்கொடுத்தார்.

By admin