முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளெங்கும் பரவலாக நடைபெற்றுவருகின்றன.

கடும் யுத்தம் நிலவிய 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஏற்பாட்டில் கஞ்சி கொட்டில்கள் அமைக்கப்பட்டு ஒருவேளை உணவாக கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

சிறுவர்கள் பெரியவர்களென மக்கள் எல்லோரும் வரிசையாக நின்று அங்கு தயாரிக்கப்படும் கஞ்சியை பெற்று தமது பசியை போக்கினர். இக்கஞ்சிக்கொட்டில்கள் அமைக்கப்பட்ட இடங்களிலும் குண்டுகள் வீசப்பட்டு மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன. இருப்பினும் பெரும்பாலான மக்கள் கஞ்சிக்கொட்டில்களை நாடி அங்கு பரிமாறப்பட்ட கஞ்சியை பெற்று தமது பசியைபோக்கினர்.

கடும் யுத்தம் நிலவிய அக்காலத்திலும் மக்களின் பசியாற்றும் முகமாக அங்கு வழங்கப்பட்ட இக்கஞ்சி மக்களின் அவல நிலையை சித்தரிக்கும் நினைவுப்பதிவாக அமைந்துள்ளது. இதன் நினைவாகவே இக்கஞ்சி பரிமாறும் செயற்பாடு பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

By admin