முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த 6ம் திகதி புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வரும் மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குனருமான அருட்திரு அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்திரு மவுலிஸ் அவர்களும் வளவாளர் அலெக்ஸ் அவர்களும் கலந்து கருத்துரை வழங்கினர். முல்லை மறைக்கோட்ட பங்குகளிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது.

By admin