மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யாஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
9ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்த நாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 17ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணை விழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் ஒப்புக்கொடுத்தார்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/06/355078670_2665960010236754_4558956230404611136_n.jpg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-24-at-12.01.28.jpeg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-24-at-12.01.30-1.jpeg)