தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயத்தில முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
அன்றைய தினம் பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் தாத்தாக்கள் பாட்டிகள் தமது பேரப்பிள்ளைகளால் மாலை அணிவிக்கப்பட்டு பவனியாக அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
 
அன்றைய திருப்பலியில் சேகரிக்கப்பட்ட காணிக்கை பொருட்கள் இருபாலையில் அமைந்துள்ள அன்னை திரேசா இல்ல வயோதிபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

By admin