பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடல் கடந்த 03ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வருடத்திற்கான செயற்பாடுகள் மற்றும் மருதமடு அன்னையின் பருத்தித்துறை மறைக்கோட்ட தரிசிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெயராஜா கூஞ்ஞ அவர்கள் கலந்து ‘அருட்பணியாளர்களின் ஆன்மீகம்’ என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

மறைக்கோட்டத்தில் பணியாற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குகளின் செயலாளர், பொருளாளர், மறைபணியாளர்களென 65 வரையானவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

By admin