நெடுந்தீவு புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை ஜோண் கனிசீயஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி அங்கு நடைபெற்றுவந்த நிலையில் 07ஆம் திகதி நற்கருணை விழா இடம்பெற்றது.
திருவிழாத் திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை சோபன் றூபஸ் அவர்களும் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா அன்று மாலை அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin