தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா ஆலய பரிபாலகர் அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
 
கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
 
திருவிழா திருப்பலியை அமலமரித் தியாகிகள் சபை மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
 
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin