தர்மபுரம் – விசுவமடு புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 01ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

திருவிழாத் திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 30ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.

நற்கருணைவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin