தர்மபுரம் புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 29ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை புலோப்பளை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சுருப பவனியும் ஆசீர்வாதமும் நடைபெற்றது.

By admin