கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கௌதாரிமுனை கிராம மக்களுக்கான சுழற்சி முறை வாழ்வாதார கடனுதவி வழங்கும் நிகழ்வு கடந்த 30ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயன்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் முதற்கட்டமாக 30 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா கடனுதவியும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பூநகரி பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களும் கௌதாரிமுனை கிராம உத்தியோகத்தரும் கலந்து சிறப்பித்தனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/11/399817526_732775995560483_739095288502563133_n-850x478.jpg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/11/399830160_732775998893816_2922498925854753822_n-850x478.jpg)