சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நல்லூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
அன்றையதினம் காலைத் திருப்பலியும் தொடர்ந்து களஅனுபவப்சுற்றுலா நிகழ்வும் இடம்பெற்றன.
நல்லுர் பங்கு சிறார்கள் மறையாசிரியர்கள் மற்றும் இளையோர்கள் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்திற்கு களஅனுபவப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குபற்றினார்கள்.

By admin