கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 31ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin