குமுழமுனை நாச்சிக்குடா புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 
16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
 
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்கழு இயக்குநர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
 
தொடர்ந்து 24ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா நடைபெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை பிலிப் ரஞ்சினகுமார் அவர்களும் திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
 
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin