கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் 30ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் திருவிழா திருப்பலியை யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை யூயின் பிரான்சிஸ் அவர்களும் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin