கிளிநொச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர்களுக்கான பாசறை நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் புனித திரேசாள் மேய்ப்புப்பணி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.
உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை றாஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடப்பணியாளர்களுக்கான கருத்துரைகள், தீப்பாசறை, திருப்பலி மற்றும் வழிபாடு பற்றிய கருத்தமர்வு,கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் 50க்கும் அதிகமான பீடப்பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin