இளையோர் மத்தியில் சமூக ஊடகங்களுடனான ஈடுபாட்டை ஏற்படுத்தும் நோக்கில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட ஊடகப்பயிற்சி பட்டறை 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைநதி கத்தோலிக்க ஊடகமைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்.மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழிகாட்டல் உரையும் குழுச்செயற்பாடுகளும் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
யாழ். திருக்குடும்ப கன்னியர் மட ஆசிரியர் திரு.ஜெயகாந்தன் அவர்கள் வளவாளராக கலந்து நெறிப்படுத்திய இந்நிகழ்வில் 40க்கும் அதிகமான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin