கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா 04ஆம் திகதி சனிக்கிழமை மிகவும் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது.
திருவிழாத் திருப்பலியை கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.
03ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி, திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், தொடர்ந்து நற்கருணை வழிபாடும், புனிதரின் திருச்சுருப பவனியும் இடம்பெற்று சனிக்கிழமை காலை திருநாள் திருப்பலியும் இடம்பொற்றது.
இவ்வழிபாடுகளில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 3500ற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து வழிபாடுகளில் பக்தியுடன் பங்குபற்றினார்கள்.

By admin