இளவாலை புனித யூதாததேயு ஆலய மற்றும் பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப்பாசறை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சேந்தான்குளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்றது.
இளவாலை பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரியவிளான் பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பிரியந்த மற்றும் பீடப்பணியாளர் காப்பாளர் திரு.புஸ்பராசா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து தியானம், கருத்துரைகள், விளையாட்டுக்கள் ஊடாக இந்நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்கள்.
இந்நிகழ்வில் 50 வரையான பீடப்பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin