![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/03/IMG_4822.jpg)
உலகநாடுகள் அனைத்தையும் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஸ்யா நாடுகளை அன்னை மரியாவின் களங்கமில்லாத திரு இதயத்திற்கு அர்ப்பணித்து செபிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அனைத்து மறைமாவட்டங்களிலும் இந்நிகழ்வுகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
யாழ் மறைமாவட்டத்தில் யாழ், புனித மரியன்னை பேராலயத்தில் யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/03/1600x900_Fatima-Prayers-Reparation-1200x675.jpg)