முல்லைத்தீவு மறைக்கோட்ட திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர்களுக்கான ஒன்றுகூடல்

முல்லைத்தீவு மறைக்கோட்ட திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆண்கள் விடுதியில் நடைபெற்றது. மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை றொபின்சன் யோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் 2023ஆம் ஆண்டில் மறைக்கோட்ட பங்குகளில்…

மண்டைதீவு குளத்துருசு வான்கதவு திறப்பு விழா

யாழ். கியூடெக் கரித்தாஸ் நிறுவன சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின்கீழ் மண்டைதீவு பிரதேசத்தில் புனரமைப்பு செய்யப்பட்டுவந்த குளத்துருசு வான்கதவு கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளநிலையில் அதன் திறப்பு விழா 07ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில்…

யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும்

யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் 04ஆம் திகதி சனிக்கிழமை யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்றது. பேரவையின் புதிய தலைவராக வணக்கத்துக்குரிய கிருபானந்த குருக்களும் இணைத்தலைவர்களாக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரியில் இரத்ததான முகாம்

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரியின் புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 07ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை குருத்துவக்கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்குருதிக்கொடை நிகழ்வில் குருமட மாணவர்கள் 36 பேர் கலந்து…

மல்வம் பங்கில் இரத்ததான முகாம்

மல்வம் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…