குளமங்கால் புனித சதாசகாய அன்னை இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உயிருக்கு உதிரம் என்று அழைப்போடு கொவிட் – 19 பேரிடர் கால இரத்ததான முகாம் குளமங்கால் புனித சவேரியார் ஆலய வளாகத்தில் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. தெல்லிப்பளை வைத்தியசாலை இரத்தவங்கி குழுவினரின் உதவியுடன் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில் 57க்கும் அதிகமான இளையோர் இணைந்து குருதிக் கொடைய வழங்கியிருந்தார்கள். குளமங்கால் பங்குத்தந்தை அருட்திரு பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டலில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

By admin