யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் கடந்த காலங்களில் பணியாற்றி வந்த அருட்திரு அன்ரனிதாஸ் அவர்கள் தனது பணியை அங்கு நிறைவுசெய்து இளவாலை மறைக்கோட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் புதிய பங்குத்தந்தையாக யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களினால் நியமனம் பெற்று பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அத்துடன் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தையாக கடந்த காலங்களில் சுண்ணாகம் பங்கில் பணியாற்றி வந்த அருட்திரு றெக்னே அவர்களும் சுண்ணகாம் பங்கின் புதிய பங்குத்தந்தையாக கடந்த காலங்களில் யாழ். புனித மடுத்தீனர் சிறிய குருமடத்தில் துணைக்குருவாக பணியாற்றி வந்த அருட்திரு ஜெறாட் அவர்களும் அவரின் இடத்திற்கு பாசையூர் பங்கில் உதவிப்பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த அருட்திரு யூட் கமில்ரன் அவர்களும் ஆயர் அவர்களினால் நியமனம் பெற்று பணிப்பொறுப்புக்களை கடந்த வாரம் ஏற்றுக்கொண்டார்கள்.

By admin