ஒரு சிறந்த சமத்துவமான, நிலையான உலகத்தை நோக்கி, என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச சமாதான தினம் செப்டெம்பர் 21ஆம் திகதி அமலமரித் தியாகிகள் சபையின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தினால் யாழ்ப்பாணத்தில் சாட்டி எனும் கிராமத்திலும் கிளிநொச்சியில் சாந்தபுரம் என்னும் கிராமத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது. மனிதம் மறைந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் உண்மையான அமைதியை அனுபவிக்க மக்களை ஊக்குவிக்கும் முகமாக சமாதான தினம் அமைந்திருந்தது. இந்நிகழ்வில் அதிகளவு மக்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை இருந்தாலும் குறிப்பிட்ட அளவு தந்தையர்கள் அன்னையர்கள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin