பரந்தன் புனித அந்தோனியார் ஆலய பங்குப் பணிமனை புனரமைப்பு செய்யப்பட்டு 03.09.2020 வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆலய வளாகத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்ட புனித அந்தோனியார் சுருபமும் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பங்குத்தந்தை அருட்திரு சகாயநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

By admin