44365066_2277749399109944_3677159739646541824_n

19 October 2018 இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி நேற்றைய தினம் எடுத்துவரப்பட்டுள்ளது. திருகோணமலை மறைமாவட்டத்திலிருந்து இச்சிலுவை எடுத்து வரப்பட்டு கொக்கிளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னைமர வாடி என்னும் இடத்தில் வைத்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு ஜோர்ச் அடிகளாரும் கலந்து கொண்டார்.
இலங்கையின் எல்லா மறைமாவட்டங்களுக்கும் எடுத்துச்செல்லப்படுகின்ற இந்தச் சிலுவை ஒக்டோபர் மாதம் 18ம் திகதி முதல் 22ம் திகதிவரை யாழ்ப்பாணம் மறைமவட்டத்தில் மறைக்கோட்ட ரீதியாக பல்வேறு பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.44468739_2277749279109956_6980168252320120832_n44265658_2277749355776615_439059311075786752_n44249054_2277749232443294_8099462718504828928_n44426270_2277829315768619_7431144079007678464_n 44216953_2277829172435300_3843002450013323264_n44247866_2277829265768624_8138819659911659520_n44262546_2277829245768626_2057373138185879552_n44244077_2277264102491807_2673878743923032064_n 44290389_2277753339109550_103677826170880000_n 44312947_2277264202491797_7961087784284848128_n

By admin