26மே.30.2018. தேவரட்ணம் செல்வரட்ணம் அடிகளார் எழுதிய குருத்துவம் திருமணம்; கொடையும் மறைபொருளும் என்ற நூல் வெளியீடு 28 மே 2018 அன்று கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக்கல்லூரியில் கல்லூரி அதிபர் ரீ.ஜே. கிருபாகரன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் ஆயர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இவ் நூலுக்கான வெளியீட்டு உரைய மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. பா.யோ.ஜெபரட்ணம் அவர்களும் நூலின் ஆய்வுரையை தமிழ் இறையியல் கல்லூரி இயக்குனர் அருட்திரு ரவிச்சந்திரன் அவர்களும் நிகழ்த்தினார்கள். இந்நூலின் ஆசிரியர் தேவரட்ணம் செல்வரட்ணம் அடிகளார் 2004ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் மெய்யியலில் இளமாணிப் பட்டத்தையும் இறையியலில் உரோமாபுரி ஊர்பானியானா பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இறையியலில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணம் புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியில் இறையியல் விரிவுரையாளராகவும் உருவாக்குனராகவும் பணியாற்றுகின்றார்.aaaaaPresentation1211019

By admin