Month: March 2024

உடக்குபாஸ் தவக்கால ஆற்றுகை

மன்னார் மறைமாவட்டம் பேசாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட உடக்குபாஸ் தவக்கால ஆற்றுகை கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை புனித வெற்றிநாயகி ஆலய பாஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை செபமாலை அன்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ் ஆற்றுகையில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மக்களென…

‘இயேசுவைப் போல் நாமும் செபிப்போமா?’ பாஸ்கா நாடகம்

மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘இயேசுவைப் போல் நாமும் செபிப்போமா?’ பாஸ்கா நாடகம் கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குமக்களினால் ஆற்றுகை செய்யப்பட்ட இந்நாடகத்தை பலரும் பக்தியுடன் பார்வையிட்டனர்.

பந்தலடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

யாழ். புனித மரியன்னை பேராலயத்தின் கீழ் அமைந்துள்ள பந்தலடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

Bian உற்பத்தி பொருட்களின் விற்பனை நிகழ்வு

போர்டோவின் திருக்குடும்ப அருட்சகோதரிகளால் பல்வேறு இடங்களிலும் தயாரிக்கப்படும் Bian உற்பத்தி பொருட்களின் விற்பனை நிகழ்வு கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. திருக்குடும்ப மாகாண பொருளாளர் குழுவின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வை…

யாழ். பல்கலைக்கழக 38ஆவது பொது பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொது பட்டமளிப்பு விழா கடந்த 14,15,16ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் கிறிஸ்தவ நாகரிகத்துறை மாணவர்களின் பெறுகைகள் இத்துறையின் வளர்ச்சியில் ஒரு…