இலங்கை இராணுவப்படை கட்டளைத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியானகே அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு கடந்த 28ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

அத்துடன் அன்றைய தினம் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திலக் தனபால அவர்கள் ஆயர் அவர்களை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றிவந்த இவர் அண்மையில் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

By admin