தர்மபுரம் பங்கிலுள்ள பிரமந்தநாறு இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி நற்கருணைப் பெருவிழாவும் தொடர்ந்து 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருநாள் திருப்பலியும் நடைபெறவுள்ளன.

பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் ஆலயம் வன்னியில் நடைபெற்ற இனப்படுகொலை போரின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்து இறைவனின் இரக்கத்தை அனுபவித்த ஓர் வரலாற்று சிறப்புமிக்க ஆலயம். இவ்வாலயத் திருநாளில் யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்து வழிபாடுகளில் பங்குகொள்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin