யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல் கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு.ஜோசப்பாலா அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள் ஊடாக முதியோரை நெறிப்படுத்தினார். இந்நிகழ்வில் 35 வரையான முதியோர் பங்குபற்றினர்.

By admin