இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 15ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித யாகப்பர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள், கலந்துரையாடல்கள், குழுச்செயற்பாடுகள் ஊடாக இக்கருத்தமர்வை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் ஆலய அருட்பணி சபை உறுப்பினர்கள், பக்திச்சபை உறுப்பினர்கள், பங்கு மக்கள் என 98 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin