கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு விழா சந்திப்புக்களை காட்சிப்படுத்தும் போட்டி 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் பங்குமக்கள் வலய ரீதியாக ஆர்வத்துடன் பங்குபற்றி, வானதூதர் மரியாள் சந்திப்பு, மரியாள் எலிசபேத்தம்மா சந்திப்பு, பாலக இயேசுவின் பிறப்பு, வானதூதர் இடையர்கள் சந்திப்பு, ஞானியர் ஏரோது அரசன் சந்திப்பு, ஞானியர் பாலக இயேசு சந்திப்பு, இறைவாக்கினர் சிமியோன் பாலகன் இயேசு சந்திப்பு, பாலகன் வறியவர் சந்திப்பு, பாலகன் செல்வந்தர் சந்திப்பு போன்றவற்றை சித்தரிக்கும் காட்சிகளை அமைத்திருந்தனர்.
இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் பங்குபற்றி இவற்றை பார்வையிட்டனர்.

By admin