உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பழைய மாணவர்களுக்கான மென்பந்து துடுப்பாட்ட போட்டி கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுகிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை, கூளாமுறிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர், புதுக்குடியிருப்பு திருக்குடும்ப கன்னியர் மட முதல்வி அருட்சகோதரி கில்டா, லண்டன் பழைய மாணவர் சங்க அங்கத்தவர் திரு. செல்வ ஜெனதாஸ் நிறோஜன் மற்றும் விசுவமடு சித்த வைத்திய அதிகாரி திரு. அபிநாத் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர், மாணவர்கள், பழைய மாணவர்கள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.

By admin