நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுக்கும் மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய தமிழர் திருயாத்திரை வருகிற மாதம் 10,11ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதென நெதர்லாந்து ஆன்மீக பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.
10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து நீர் ஊற்றை நோக்கிய மெழுகுவர்த்தி பவனியும் இடம்பெறவுள்ளதுடன் 11ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணை ஆராதனையும் திருவிழா திருப்பலியும் நடைபெறவுள்ளன.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுக்கவுள்ளார். இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு நெதர்லாந்து ஆன்மீக பணியகத்தினர் புலம்பெயர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

By admin