ஊறணி பங்கின் துணை ஆலயமான முலவை புனித செபமாலை அன்னை ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
இவ்வாலயம் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் முற்றாக அழிக்கப்பட்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் தற்போது மீளவும் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin