உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பலாலி பங்கின் புனித டொன் பொஸ்கோ இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பலாலி விண்மீன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை பிறையன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை பத்திநாதர் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கிராம சேவகர் திருமதி டொறின் சைலஜா, வைத்தியர் றொசான், பலாலி வடக்கு அ.த.க பாடசாலை அதிபர் திரு. விஜயகுமார் மற்றும் இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய தலைவர் செல்வன் நிறாஜ் ஆகியோர் சிறப்பு விருந்தனர்களாகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin