நெடுந்தீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 02ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை பலாலி பங்குத்தந்தை அருட்தந்தை எரோனியஸ் அவர்களும் நற்கருணை விழா திருப்பலியை நெடுந்தீவு மகாவித்தியாலய ஆசிரியர் அருட்தந்தை சோபன் றூபஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin